மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியிருக்கிறது கூலி.
பட போஸ்டர்கள் பல்வேறு யூங்களை எழுப்பிய நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை கூலி பூர்த்தி செய்ததா? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
மக்கள் கொண்டாடுகிறார்களா? என பல கேள்விகளுக்கு கூலி, கூலி கொடுத்தததா? என்பதை திரை விமர்சனத்தில பார்க்கலாம்.
மன்னன், சின்னதம்பி படங்களை இயங்கிய பி.வாசு இயக்கத்தில் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில் ஆர்.சரத்குமார் நடிப்பில்1995-ம் ஆண்டு வெளியான படம் கூலி.
இந்த படத்தில் சரத்குமார், மீனா, ராதாராவி, ராஜா மற்றும் கவிதா விஜயகுமார் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தொழிலாளர்கள் பிரச்சினையை குடும்ப உறவுகளுடன் அழகாக சொல்லியிருக்கும் படம்.
ராதாரவி ஒரு பணக்கார தொழிலதிபர். ஊதிய உயர்வு கேட்ட தொழிலாளர்களின் போராட்டத்தை பொன்னம்பலத்தைக் கொண்டு சமாளித்து விடுகிறார். பொன்னம்பலம் தொழிலாளர்களை ஏமாற்றுகிறார்.
எதுவும் செய்ய முடியாமல் தவிக்கும் தொழிலாளர்களுக்காக அவதாரம் எடுக்கிறார் சரத்குமார்.
யூனியன் தலைவராகும் சரத்குமாருக்கும் காத்திருக்கும் சவால்கள் படத்தின் கதை. மீனா இந்த படத்தில் ரொம்பவே அழகாக இருக்கிறார்.
படத்தின் திருப்பதே சரத்குமாரின் சகோதரி தான். அவர் எடுக்கும் முடிவுகள், பாசப் போராட்டத்தில் சரத்குமார் என பட முழுக்க தனது முத்திரையை பதித்து இருக்கிறார் சரத்குமார்.
படம் பல இடங்களில் இழுவையாக இருப்பதால் சலிப்பு தட்டுகிறது. அதனை கவுண்டமணி-செந்தில் காமெடி சமன் செய்து விடுகிறது.
பாடல்கள் ரசிக்கலாம், திரைக்கதையை இன்னும் மெருகேற்றி இருக்கலாம். மொத்தத்தில் கூலி கவரக்கூடியவன் தான்.
--------
No comments:
Post a Comment